2031 ஆம் ஆண்டுக்குள் லஞ்சம் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் தூத்துக்குடி கோட்ட இணை ஒருங்கிணைப்பாளராக ஏ. பிரான்சிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை சீட்டா நிறுவனர் மற்றும் அதன் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு பி. பாபு அறிவித்துள்ளார்.

இந்த நியமனம் மூலம், மாவட்டத்தில் ஊழலை ஒழித்து, சுத்தமான நிர்வாகத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்கள் பங்கேற்புடன் தூத்துக்குடியை லஞ்சமில்லா மாவட்டமாக மாற்றும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.