தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தருவைக்குளம் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். மேலும், புதிய குடும்ப அட்டை பெறும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (குழந்தை வளர்ச்சித் திட்டம்) காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, தோட்டக்கலை துறை அலுவலர் நாராயண பிரியா, கூட்டுறவு சங்க செயலாளர் கென்னடி, கிளைக் கழக செயலாளர்கள் தயாளன், ஞானபிரகாசம், மகளிர் அணி பிரதிநிதி அன்ன செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.