அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கிய உத்தரவின்பேரில், அண்ணல் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட ஜே பேரவை செயலாளர் அமலதாசன்பழம் உள்ளிட்ட பல்வேறு அணி, பிரிவு, சங்க நிர்வாகிகள் பெரும்பாலோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும், மீனவணி நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு உறுப்பினர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உப்பு தொழிலாளர் சங்கம் சார்பினர், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், நகர–மாவட்ட மேலாண்மை உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகளிர் அணி சாய் சுதா, ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணு தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லெட்சுமி உள்ளிட்ட பெண்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வு, அம்பேத்கரின் சமூக நீதி சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்தது.