விளாத்திகுளம் வட்டம், அரியநாயகிபுரம் அருள்மிகு ஸ்ரீ சோலைசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் G.V. மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் நல்லமுகமது, விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், கிளை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அல்காப், இலியாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகுதி மக்கள் திரளாக பங்கேற்ற இந்த பாரம்பரிய மாட்டு வண்டி எல்கை பந்தயம் விழாவிற்கு மேலும் வசீகரத்தை சேர்த்தது.