தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலரும், சமூக போராளியும், வழக்கறிஞருமான தெய்வத்திரு. பி.எஸ். அன்பரசன் எம்.ஏ.பி.எல்., 4 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதைதொடர்ந்து 50 வது வார்டு பகுதி கணேசன் காலனி 1 வது தெருவில் உள்ள அவரது நினைவு தூண் அமைந்துள்ள இடத்தில் 4 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கவுன்சிலர் சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர் அன்பரசனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் பிரையன்ட் நகர் பகுதி கழக செயலாளர், கவுன்சிலர் பி.பி. ராமகிருஷ்ணன், வட்டபிரதிநிதிகள் வேல்மணி, G.M. செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லக்ஷ்மணன், வட்ட செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, மூக்கையை, நவநீதன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், பகுதி விவசாய அணி பெரிநாயகம், தகவல் தொழில்நுட்ப அணி குமார், அண்ணனின் அன்பு தம்பிகள் வள்ளிநாயகபுரம் மணிகண்டன், செல்வின், சீனிவாசகுமார், ஆனந்த், இசக்கி ராஜா, யாகவான் வட்டக் கழகத் துணைச் செயலாளர் மணிகண்டன், பகுதி அணி நிர்வாகிகள் சிவபெருமாள், பழனி, கிங்ஸ்லி, ஆதிமூலம், கோட்டாளமுத்து, சமையல் மாஸ்டர் காலாங்கரை மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.