சட்டமா மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, சுப்புராஜ், மாரிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சடையாண்டி, சபாபதி, வில்லாளன் ரெஸ்லி, பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.