தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தல் மற்றும் நுழைவு வாயிலில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தித்தர வேண்டுமெனும் கோரிக்கையை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து முன்வைத்தனர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கையை கவனமாக கேட்டு, அதற்கான தேவையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் வாரியார், மாநகராட்சி வழக்கறிஞர் தொல்காப்பியன், துணை தலைவர் சிவசங்கர், பொருளாளர் கணேசன், துணை செயலாளர் பாலகுமார், செல்வி செந்தமிழ் செல்வி, ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.