தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கழக BLA-2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது, வாக்காளர்களின் பெயர்கள் சரியாக சேர்க்கப்படுவது, தவறுகள் திருத்தப்படுவது மற்றும் வாக்குரிமை அனைவருக்கும் உறுதிசெய்யப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மாண்புமிகு கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் தனது உரையில், “வாக்காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு வாக்காளரின் பெயரும் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். திமுக பாக முகவர்கள் பொதுமக்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் விவரங்களை சரிபார்த்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

மேலும், வாக்குச்சாவடி வாரியாக உள்ள பிரச்சினைகள், திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் சிறப்பு திருத்தப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அமைப்பினர், தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி நிலை நிர்வாகிகள், பெண்கள் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.