தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இறைவனடி சேர்ந்த திரு. நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான சரவணப்பெருமாள் நடராஜன் நாயக்கரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.