தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர வளர்ச்சியைச் சார்ந்த பல முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தமது வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக பேசி கருத்து தெரிவித்தார்.
தமது வார்டில் சாலை புனரமைப்பு, குடிநீர் வசதி மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனுக்காக வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சரவணகுமார் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாநகராட்சி கூட்டத்தில் 50வது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர் சரவணகுமார் பேச்சு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காரப்பேட்டை நாடார் பள்ளியில் அதிர்வலையம்: தேர்தல் அரசியலில் சிக்கிய ஆசிரியர்கள் – செயலாளர் ரமேஷ் மீது பொய்க்குற்றச்சாட்டு என விளக்கம்!
அடுத்த
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கவும் – தியேட்டர் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை அவசியம்! தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
sample
09 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026