தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சங்கரன் இன்று காலை தூத்துக்குடி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் பணி செய்து கொண்டு இருந்தார்.
மார்க்கெட் எதிரே அண்ணா சிலை பின்புறம் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தார் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அந்த சாலையை பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சங்கரன் சிறிதும் யோசிக்காமல் பைப் லைன் இணைப்பதற்காக அருகில் தோண்டப்பட்டு மண் குவிக்கபட்டுள்ள இடத்தில் இருந்து மேடு பள்ளம் உள்ள சாலையை சீர் செய்வதற்கு மண்ணை மண்வெட்டி மூலம் தன் கைகளால் அள்ளி சாலையை சீரமைத்து பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார்.
இதை பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை ஒரு நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி
சோசியல் மீடியாவை கலக்கும் போக்குவரத்து தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
அடுத்த
போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி - வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026