விளாத்திகுளம் பகுதியில் மறைந்த ஆத்தியப்பன் மற்றும் பூக்கடை பாண்டியம்மாள் அவர்களின் கணவர் மாணிக்கம் யோகீஸ்வரர் ஆகியோருக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.