தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஒன்றாம் கேட் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் விளக்கு கோபுரத்தில் விளக்குகளை மாற்றி வழங்குமாறு அந்தப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி அந்த இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் மற்றும் காந்தி சிலை அருகில் நடைபெற்று வரும் ஓய்விடப் பூங்கா பணிகளையும் நேரில் பார்வையிட்டு முன்னேற்ற நிலையை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.