தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஒன்றாம் கேட் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் விளக்கு கோபுரத்தில் விளக்குகளை மாற்றி வழங்குமாறு அந்தப் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி அந்த இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் மற்றும் காந்தி சிலை அருகில் நடைபெற்று வரும் ஓய்விடப் பூங்கா பணிகளையும் நேரில் பார்வையிட்டு முன்னேற்ற நிலையை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் மின் விளக்கு மாற்று பணிகளை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொது கிணறு மூடல் காரணமாக மக்கள் அவதி – கிணறு மீண்டும் திறக்க மனு அளித்த பாஜக கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி!!
அடுத்த
விளாத்திகுளத்தில் இரு குடும்பங்களுக்கு ஆறுதல் – MLA G.V.மார்கண்டேயன் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026