தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 1500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க, சீருடை, போனஸ், PF ஸ்லிப், இஎஸ்ஐ கார்டு, முறையாக சம்பள சிலிப், வேலை பார்க்கும் போது கை கால்களில் அடிபட்ட தொழிலாளர்களுக்கும் இறந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளில் உள்ள ஒரு சில கழிவுகளை கடையில் போடக்கூடாது ஆளும் கட்சியினர் நாங்கள் டெண்டர் எடுத்து உள்ளோம் எங்களிடம் தான் போட வேண்டும் என்று தொழிலாளர்களை மிரட்டுவது, ஒப்பந்த நிறுவனங்களை வைத்து மிரட்டுவது, ஒடுக்குவது, இதற்கு தூத்துக்குடி மேயரும் உடந்தையாக என முழக்கமிட்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல்அறிந்த மேயர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.