தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று (12.03.2025) மாலை நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கணினி பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த மாதத்தில் தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கணினி பட்டா கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக முகாம் ஒன்று அமைச்சர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த முகாமில் 3000 க்கு மேலான மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு கூடிய விரைவில் படிப்படியாக கணினி பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று (12.03.2025) முதல் கட்டமாக 151 பயனாளிகளுக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் கணினி பட்டா வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் வழங்கினார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்!!
அடுத்த
அரசு புறம்போக்கு நிலமா என உறுதி செய்ய வேண்டும்!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026