வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தை அறம் போற்றும் அறிவுக்கோட்டமாக மாற்றும் நோக்கில் நடைபெற்று வரும் முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்து பார்வையிட்டார். தமிழ்மண் மானமும் மொழி மானமும் காக்கப்படும் இந்த அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையின் வாசிப்பு பண்பாட்டை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.

முதலமைச்சருடன் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் உடன் கலந்துகொண்டார். நிகழ்விற்கு வருகை தந்த இவர்களை திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மரியாதையுடன், கனிவான வரவேற்பு அளித்தார்.

திமுக 75 அறிவுத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, அறிவு பரவல் மற்றும் சமூக முற்போக்கை நோக்கிச் செலுத்தும் திமுகவின் அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.