தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாடியில், தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கருவூலத்துறை கூடுதல் இயக்குநரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான துரை கனேசன் அவர்கள் தலைமையேற்று, “நூலகமும் குழந்தைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி மாணவிகள் எஸ். அஸ்வர்னிகா, சே. மரிய ரேச்சல், ம. மகாலட்சுமி ஆகியோர் “வாசிப்பனுபவ பகிர்வு” எனும் தலைப்பில் தங்கள் புத்தக அனுபவங்களையும் வாசிப்பின் தாக்கத்தையும் பகிர்ந்து உரையாற்றினர். நிகழ்ச்சியை தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்கள் தொகுத்து வழங்கினார்.

விழாவில் எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன், ஆசிரியர் சண்முகவேல், வழக்கறிஞர் பாலசேகர், க. லெட்சுமணன், து. பத்மநாதன், நா. மாணிக்கவாசகம், நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், முனைவர் அல்பர்ட், மகாராஜா, கருவூலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் செரீப் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர். இறுதியில் து. பத்மநாதன் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.