தூத்துக்குடி, நவம்பர் 16, 2025 “மரம் மனிதனுக்கு வரம்… விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்குவதில்லை” என்ற நம்பிக்கையை செயலாக்கமாக மாற்றி வரும் ALL_CAN_TRUST அமைப்பு, தொடர்ந்து 392 வாரங்களாக பசுமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இன்று (16.11.2025) காலை, தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுபட்டி அங்கன்வாடி அருகிலுள்ள பொதுப் பகுதி தெரிவுசெய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணிகள் உற்சாகமாக நடைபெற்றன. சமூக நலன், பசுமை பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறைக்கான ஆரோக்கியமான சூழல் உருவாக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
“நாம் நடும் மரங்கள் நமக்கல்ல, நம் தலைமுறைக்காக” என்ற உணர்வை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு வகை நாட்டு மரக்கன்றுகள் நட்டதுடன், அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளூர் குடிமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தன்னார்வமாக பங்கேற்று பசுமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். நிகழ்வை ALL_CAN_TRUST அமைப்பினர் ஒருங்கிணைத்து, மரக்கன்றுகளின் பராமரிப்பிற்கான வழிமுறைகளையும் பயிற்சியளித்தனர்.
சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த செயல்பாடு, தூத்துக்குடி நகரத்தில் பசுமை காற்றோட்டத்தை அதிகரிப்பதோடு, இயற்கை பாதுகாப்பு இயக்கத்துக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
“மரம் நட்டால் வாழ்வு நட்டதற்கு சமம்!” – ALL_CAN_TRUST அமைப்பின் 392வது வார பசுமை பணியகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“உலக மீனவர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் மாபெரும் படகு போட்டி & நலத்திட்ட விழா – மீனவர்களின் வாழ்வோடு இணைந்து திகழும் திமுக!”
அடுத்த
முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை – இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கனிவான வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026