தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 388 மாணவிகளுக்கு மாநில அரசு செயல்படுத்தி வரும் இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.

நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.