விளாத்திகுளம் – தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகி ராமசூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகி ராம் சூரத்குமார் 107-வது ஜெயந்தி விழா மரியாதையுடன் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு பக்தர்களுடன் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், சமூக ஆர்வலர் இளையராஜா, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேநாளில் கோவில்பட்டியில் நடைபெற்ற அ.லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குடும்பத்தின் இல்ல திருமண விழாவிலும் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்கள் தம்பதிகளை வாழ்த்தி ஆசீர்வதித்தார். உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.