ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டு–குழியுடன் இருந்ததால், மழைநீர் தேங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று அந்த சாலையின் நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பகுதி கழக செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.