செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA 2 மற்றும் பாகக்கிளை செயலாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை, விதுர் பேலஸில் உற்சாகமாக நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் ஆனையின் படி நடைபெற்ற இக்கூட்டம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளர், கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A., B.L., Ex.M.P. முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நாவலூர் முத்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் ப.தன்சிங் Ex.MLA, தாம்பரம் தொகுதி ஐ.டி.விங் பொறுப்பாளர் யுவகுமார், பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் பூவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகுதி கழக செயலாளர்கள் பம்மல் வடக்கு ஜெகனாதன் M.C., பம்மல் தெற்கு அப்பு (வெங்கடேசன்), பல்லாவரம் டி.ஜெயப்பிரகாஷ், அனகாபுத்தூர் பி.வேலாயுதம் M.A., குரோம்பேட்டை எம்.கே.சதீஷ் M.L., கீழ் கட்டளை சந்திர சேகர் ராஜா, பரங்கிமலை ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு கழக வளர்ச்சிக்கான முக்கிய ஆலோசனைகளை முன்வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் வட்ட பிரதிநிதி அய்யப்பன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.