தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தில் சட்டப்பணியில் இணைந்துள்ளார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்.

நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூக நலனுக்காக செயலாற்றும் நோக்கத்துடன் சட்டத் துறையில் களம் இறங்கியுள்ளார். சட்ட விழிப்புணர்வு, மகளிர் உரிமைகள் மற்றும் பொதுநல சட்டப் பணிகளில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது புதிய சட்டப் பயணம் வெற்றி பெறவும், நீதியையும் உண்மையையும் நிலைநிறுத்தும் வக்கீலாக உயரவும் பலரும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.