தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "தெற்கு மண்டலத்தில் உள்ள பகுதிகள் 2009 ல் தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
ஆனால் தற்போது அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் கோரிக்கைளை ஏற்று குறுகிய பகுதிகளில் கூட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் எந்த வித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது. விரைவில் தெற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, மதுகுடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முள்ளக்காடு வரையில் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது என்றார்.
முகாமில் துணை ஆணையர் சரவணகுமார், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன், துணை பொறியாளர் சரவணன், நகர்நல அதிகாரி சரோஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் விரைவில் மகளிர் பூங்கா, மது குடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதியம்புத்தூர் கிராமத்தில் தூத்துக்குடி முதல் சவரிமங்கலம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்த சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026