தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக நீதிமன்ற வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சி அளித்தது. நீதிமன்றம் நோக்கி வந்த வழக்கறிஞர்கள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் நீரில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மழைநீர் பெருமளவில் தேங்கி, நடைபாதைகள் மற்றும் நுழைவு வாயில்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால், பலர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் வெளியேவே நின்று தவித்தனர். நீதிமன்ற பணிகளும் தாமதமானது.
“ஒவ்வொரு மழைக்கும் இதே நிலைதான். உடனடியாக நீர்நீர் வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம்” என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பொதுமக்களும், “நீதிமன்றம் போன்ற முக்கிய இடம் இவ்வாறு பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமானது; உடனடி நடவடிக்கை அவசியம்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
மழைநீர் வடிகால் வசதி குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குறைகூறி, நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு கண்டு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
“கனமழையில் குளமாக மாறிய தூத்துக்குடி நீதிமன்றம் – வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிரமத்தில் நடவடிக்கை கோரிக்கை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கனமழை நிலைமைகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“இந்திய இராணுவத்தில் ‘மறவர் ரெஜிமெண்ட்’ மீளமைக்க வேண்டும் – பிஎம்டி தலைவர் இசக்கிராஜா வலியுறுத்தல்”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026