தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் தெப்பக்குளம் மற்றும் ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகில் உருவாக்கப்பட்டு வரும் ஓய்விடப் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்விடப் பூங்கா பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதற்காக பணித் தரநிலைகள், சுற்றுப்புற சுத்தம், நடைபாதை அமைப்பு, பசுமை வளர்ப்பு போன்ற அம்சங்களை மேயர் முழுமையாக ஆய்வு செய்தார்.
இத்தாய்வில் வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்பூங்கா சிறப்பாக அமைய தேவையான கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி
“இரண்டாம் கேட்–ஒன்றாம் கேட் இணையும் இடங்களில் புதிய தோற்றம்… மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு!”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை வணக்க நிகழ்வு!!
அடுத்த
பூபால்ராயபுரத்தில் புதிய மீன் ஏலக்கூடத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026