அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து பழைய மாநகராட்சி முன்பாக மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து, 2026ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தாமணி, பொருளாளர் சேவியர், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் எரோமியாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, சந்தனப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள், ஜெ. பேரவை உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், மன்ற நிர்வாகிகள், பெண்கள் அணி நிர்வாகிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.