தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் (இ.கா.ப) இன்று (18.12.2025) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை அவர் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், மதுவிலக்கு சட்ட அமலாக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார்.

அப்போது, வழக்குகளின் விசாரணை துரிதமாகவும், சட்டப்படி முறையாகவும் நடைபெற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.