“விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையேல் உரம்; அடுத்த தலைமுறைக்கு பணத்தை அல்ல, சுவாசத்தை விட்டுச் செல்வோம்” என்ற நல்லெண்ணப் பணியை முன்னெடுத்து வரும் ALL CAN TRUST அமைப்பு, தனது 394வது வார பசுமை பணியை இன்று தூத்துக்குடி – திருச்செந்தூர் மெயின் ரோடு, லெவிஞ்சிபுரம் CGE காலனி பகுதியில் மேற்கொண்டது.

பகுதி முழுவதும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பும் விதமாக, பல்வேறு இன மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது. சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற நோக்கில், அமைப்பினரின் தொடர்ந்து நடைபெறும் வாராந்திர பசுமை பணி உள்ளூர் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

“மரம் வளர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்தை செயலாக மாற்றும் வகையில் இம்மரக்கன்று நடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.