இன்று வழக்கறிஞர் தினமாக நாடு முழுவதும் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறையில் முக்கிய பங்காற்றி சமூக நியாயம் நிலைநாட்ட தினமும் பாடுபடும் வழக்கறிஞர்களின் சேவையை போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த வழக்கறிஞர் தினத்தை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை வக்கீல் ரமேஷ் பாண்டியன் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளார். சட்டம், நீதி மற்றும் குடிமக்கள் உரிமையைக் காக்கும் பணியில் வழக்கறிஞர்கள் வகிக்கும் பங்கு பெருமைக்குரியது என்றும், அவர்கள் தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.