தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ரோச் பூங்கா, ஆஷ் மெமோரியல் சந்திப்பு மற்றும் இந்திரா காந்தி சிலை அருகிலுள்ள சந்திப்பு பகுதிகளில் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

நிறைவடைந்த இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.