தூத்துக்குடியில் அதிமுக வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி வாட்டர் டேங்க் அருகில் இன்று (02.04.2025)  காலை நடைபெற்றது.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கும் பணி பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் மாநகராட்சி சார்பில் என பல்வேறு அமைப்புகளின் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக மாவட்ட வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரை சிங், 18 வது வார்டு வட்ட பிரதிநிதி, இளைஞர் பாசறை மேற்கு பகுதி தலைவர் ஆறுமுக நயினார் ஆகியோரின் ஏற்பாட்டில் திறக்கவிருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் யூ.எஸ். சேகர், மத்திய முன்னாள் கூட்டுறவு தலைவர் ராஜ கோபால் முன்னாள் கவுன்சிலர் கூட்டுறவு சேர்மன் எட்வின் பாண்டியன், மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், போக்குவரத்து துறை மண்டல நிர்வாகி சண்முக ராஜ், அதிமுக விபத்து பிரிவு செயலாளர் முருகன், முன்னாள் விரைவு போக்குவரத்து துறை டெரன்ஸ், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை நிர்வாகிகள் பெலிக்ஸ், ராஜேந்திரன், சங்கர், 47 வது வார்டு வட்ட செயலாளர் சகாய ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க தலைவர் விஜய் குமார், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.