சுதந்திரப் போராட்டத்தின் அக்னிக்கனல், தியாகச் சின்னம் வ.உ. சிதம்பரப் பிள்ளை அவர்கள் நாட்டின் நலனுக்காக தனது சொத்துகள் அனைத்தையும் தாராளமாக அர்ப்பணித்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அன்னாரின் பூத உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிகழ்வில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவா வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிதம்பரப் பிள்ளையின் தேசபக்தி, தியாகம் குறித்து சிறப்பு நினைவுரையாற்றினர்.

தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட மாவீரரின் தியாகத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.