தூத்துக்குடி MAC கார்டன் பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் இன்று அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

மழைநீர் தேங்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்த அமைச்சர், பொதுமக்களிடமும் நிலைமையை நேரடியாக கேட்டறிந்து, தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு வழங்கினார். மழைநீரை சீராக வெளியேற்ற கூடுதல் பம்ப் செட்கள் அமைத்தல், நீர் ஓட்டத்திற்கு தடையாக இருந்த பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவாக தொடங்கப்பட்டன.

பகுதி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் விதமாக செயல்பட்டதற்கு அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.