தூத்துக்குடி MAC கார்டன் பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் இன்று அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மழைநீர் தேங்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்த அமைச்சர், பொதுமக்களிடமும் நிலைமையை நேரடியாக கேட்டறிந்து, தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு வழங்கினார். மழைநீரை சீராக வெளியேற்ற கூடுதல் பம்ப் செட்கள் அமைத்தல், நீர் ஓட்டத்திற்கு தடையாக இருந்த பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவாக தொடங்கப்பட்டன.
பகுதி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் விதமாக செயல்பட்டதற்கு அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி MAC கார்டனில் தேங்கிய மழைநீரை அகற்ற அவசர நடவடிக்கை — அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உற்சாகப் பயணத்துக்கு கைதட்டல் — மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!!
அடுத்த
பி & டி காலனி 15-வது தெருவில் மழைநீர் பாதிப்புகள் – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026