தூத்துக்குடி ஸ்பார்க் இயக்கத்தின் 9வது ஆண்டு விழாவில் எஸ்பி சிலம்பரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பார்க் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா நிறுவனர்கள் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,

நிகழ்ச்சியில் வீ கேன் டிரஸ்ட் சார்பில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார். இதனை ட்ரஸ்ட் சார்பாக கிறிஸ்டோபர், செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.