“கண்ணுக்கு மை அழகு, மண்ணுக்கு மரம் அழகு” என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் நேய இளைஞர்கள் பசுமை பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ALL CAN TRUST சார்பில் நடைபெற்ற 391வது வார பசுமை பணி இன்று (09.11.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் நடைபெற்றது.

பத்து அடிக்கு பேனர் வைக்கும் இளைஞர்கள், ஐம்பது அடிக்கு ஒரு மரம் நடுவோம் எனும் எண்ணத்துடன் மரக்கன்றுகள் நடவு செய்து, “மரம் வளர்ப்போம் – பசுமையை பாதுகாப்போம்” என்ற செய்தியை பரப்பினர்.

இந்நிகழ்வில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.