தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பணிகள் விரைவாகவும் தரமாகவும் நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனை வழங்கினார். மேலும், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க, வடிகால் பணிகள் தாமதமின்றி நிறைவு செய்யப்படும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.