தூத்துக்குடியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கணினி பட்டா விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடியில் முதற்கட்டமாக நடைபெற்ற மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சியில் 3,624 பேர் மனு அளித்திருந்தனர். அதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவாய்துறையினர் சரி பார்த்து பட்டா வழங்கப்படுகிறது.
இதற்கு ஆட்சியர், ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுக்கள் முழுமையாக இந்த பணியை செய்து வருகின்றனர். இரண்டு கட்டமாக கணினி பட்டா இதுவரை 282 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் முறையாக முறைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு வழங்கப்படும். இதற்கான முழு பங்களிப்பு கலெக்டரும் ஈடுபட்டு பணியாற்றுகிறார். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி பொறியாளர் சரவணன், மாநக திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமி நாதன், கவிதா தேவி, துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தூத்துக்குடி
முதல்வரின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் தான் தகவல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026