தூத்துக்குடி மாநகராட்சி 50 வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பி ஒன்று அருந்து விழுந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின் கம்பி ஒன்று அருந்து கிடைப்பதாகவும், அதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அறிந்து அந்த பகுதி மக்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சில நிமிடங்களில் கவுன்சிலர் சரவணகுமார் உரிய இடத்திற்கு விரைந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை பார்வையிட்டு இரவு நேரங்களில் பணி செய்யக்கூடிய மின்வாரிய பணியாளர்களை அழைத்து மின் கம்பங்களில் இருந்து அருந்து விழுந்த மின்கம்பிகளை உடனே சரி செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுத்தார்.

என் நேரமும் தூங்காது தம் பகுதி வார்டு மக்களுக்காக அயராது உழைத்து கொண்டு சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு 50 வது வார்டு பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.