சென்னை, நவம்பர் 19 — தமிழக பொதுநூலகத் துறையில் சிறப்புப் பணியாற்றி மாநில அளவில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கிய நூலகர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள் மற்றும் நூலக வளர்ச்சிக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில், சிறந்த நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது”, வாசகர் வட்டத் தலைவர்களுக்கு “நூலக ஆர்வலர்” விருது வழங்கப்பட்டது.
மேலும், அதிக உறுப்பினர் சேர்க்கை சாதித்த நூலகங்கள், கட்டிடம் பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்கள், நூலக மேம்பாட்டிற்கான நன்கொடையாளர்கள் ஆகியோர் கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூலக வளர்ச்சி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூகத்தின் அறிவாற்றல் முன்னேற்றத்தை முன்னிறுத்தும் வகையில் மாநில அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருதுகள், நூலகச் சேவையின் மதிப்பையும் சமூகத்தில் அதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
தூத்துக்குடி
தமிழகத்தில் நூலகச் சேவையை உயர்த்திய முன்னோடிகளுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற மிளகாய் வற்றல் மஹா யாகம் — பக்தர்களின் பலநல வாழ்வுக்காய் பிரத்தியங்கிராதேவியின் அருள் வழிபாடு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026