தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் தமிழக மக்கள் நலன்கள் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் மாதா கோவில் அருகே நேற்று மீன்பிடித் துறைமுகம் வாயிலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக சார்பில் மாநில எம்.எல்.எப். பொருளாளரும், பேச்சாளருமான அனல் செல்வராஜ் கலந்து கொண்டு தனது கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் மதிமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ் உட்பட அனைத்து கட்சி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.