உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் இன்று மீனவர் சங்கங்கள் சார்பில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு கேக் வெட்டி, உலக மீனவர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் தனது உரையில், மீனவர்களின் பாதுகாப்பு, நலன், கல்வி, தொழில் மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கான மாநில அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, “மீனவர்கள் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளனர்; அவர்களின் முன்னேற்றம் எப்போதும் அரசின் முதல் முன்னுரிமை” என தெரிவித்தார்.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உலக மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழா, மீனவர்களின் ஒற்றுமை, உரிமை மற்றும் நலனுக்கான திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.
தூத்துக்குடி
உலக மீனவர் தினத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட விழா – தூத்துக்குடி துறைமுகம் உற்சாகம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்எல்ஏ G.V. மார்கண்டேயன் நேரில் ஆய்வு – பொதுமக்கள் குறை தீர்க்கவும், புதிய நீர்தேக்கத் திட்டத்துக்கும் அடிக்கல்!!
அடுத்த
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர்: தூத்துக்குடியில் ஐ.ஜ.த. உற்சாக வெற்றி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026