ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாண்டியாபுரம் ஊராட்சி மேலப்பாண்டியாபுரம்  கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணி, 2.84 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, பணி மேற்பார்வையாளர் கலையழகன், ஊராட்சி செயலர் லிங்கசெல்வி, அரசு ஒப்பந்தகாரர்கள் முருகன், முகம்மது, கிளைக் கழகச்
செயலாளர்கள் அரியநாயகம் மற்றும் கந்தசாமிபுரம், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், பத்திரன், தனசேகரன், சுரேஷ் குமார், பெத்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, மகளிரணி அம்பலம், சுப்புகாமாட்சி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.