தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் ஊராட்சி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்

1. கிருஷ்ண பிள்ளை தெருவில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி,

2. கிருஷ்ணம்மாள் பிள்ளை மெயின்ரோடு ரூ.3.55 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி,

3. பாரதிநகர் மற்றும் கிழக்கு தெருவில் ரூ.13.64 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அவைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் பிரான்சிஸ்கோ, ஊராட்சி செயலாளர் சிவா, ஒன்றிய கழக செயலாளர் புதூர் S.R. சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை. ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண், பரியேரும் பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி வசந்த், சிறுபான்மையினர் அணி ஸ்டீபன், புதூர் பரமசிவம், மகளிர் அணி முத்துலட்சுமி, கிளை செயலாளர்கள் சங்கரநாராயணன், முருகேசன், ராஜா, கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.