ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழஅரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.17.65 மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி,
பொதுப் பணித்துறை  பொறியாளர் அரவிந்த் வேலவன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகராஜ், பழனிமுருகன், கிளைக் கழக செயலாளர் மாரியப்பன், சிவா, கார்த்திக், மாடசாமி, சித்திரைவேல், பேச்சிராஜா, சித்திரைவேல், நடராஜன், அழகுவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்சாந்தி, ஒப்பந்தகாரர் பேச்சிமுத்து, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.