தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இன்று (23.06.2025) காலை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுமார் 142 ஏழை எளிய மக்கள் இலவச வீட்டு மனைகள் கேட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் மேற்கண்ட நபர்களுக்கு இலவச வீட்டுமனைகள் தமிழக அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளரை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் போராட்டம் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில நிறுவன தலைவர் அர்ச்சுனன், தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில பொதுச் செயலாளர் சி.ராஜா, தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில பொருளாளர் இ. முத்து பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக  புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்து பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியின் போது இரண்டரை வருடங்களாக மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் இலவச வீட்டு மனைகள் அரசு வழங்க கோரி மனு கொடுத்தும் இதுவரை பலன் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் இது விஷயமாக தலையிட்டு மக்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும்.

15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி ஏற்பாடு செய்கின்ற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தோழமை இயக்கத்தின் தொண்டர்கள் நிர்வாகிகள் என பெருமளவில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். மாவட்ட ஆட்சியாளர் இல்லாத காரணத்தால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கி குறைகளை எடுத்து கூறினார்கள். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

நிகழ்வில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் M. ஜான், தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் கா. சீனிவாசன், தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் S. முனியம்மாள், தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் R. இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.