தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜார்ஜ் ரோட்டில், பொதுமக்களின் தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக உருவாகியிருந்த ரோட்டின் ஓரங்களில் தேங்கிய மணல் திட்டுக்கள் அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல், வாடி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்தப் பகுதிகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். சாலையின் அகலம், நீரேற்ற நிலை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.