தூத்துக்குடி தமிழ் சாலை ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடையின் புதிய கிளை இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. சேலத்தில் தள்ளுவண்டியில் தொடங்கி இன்று உலக அளவில் பெயர் பெற்றிருக்கும் இந்த பிரபல உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழா பொதுமக்களின் பேராதரவில் நடைபெற்றது.

திறப்பு விழாவில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில் ஜீவன் ஜேக்கப், மகிழ் ஜீவன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெருமளவில் திரண்டுவந்து பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர்.

தூத்துக்குடி மக்கள் புதிய கிளையை உற்சாகத்துடன் வரவேற்று, முதல் நாளிலேயே ஆர்.ஆர். பிரியாணிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.