தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதின் முன்னேற்றத்தை அவர் நேரடியாக மதிப்பீடு செய்தார்.

ஆய்வின்போது வட்டக் கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பணிகள் தரமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றும் மேயர் அதிகாரிகளுக்கு பணித்தரினார்.

போல்பேட்டை பகுதி மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த சாலை மேம்பாட்டு பணிகள் விரைவாக முடிவடைவது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.