தூத்துக்குடி, நவம்பர் 10:
இன்று (10.11.2025) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பாபா சாகிப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் போராளி அண்ணன் திரு மா.மாரிச்செல்வம் அவர்களின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர் திரு இ.அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்டச் செயலாளர் திரு மா.மாரிச்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு ஆ.இந்திரன், திரு மு.அந்தோணிசாமி, மகளிர் அணி செயலாளர் திருமதி எஸ்.சிறுலட்சுமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு எம்.சந்தியாகு, APLF செயலாளர் திரு எஸ்.கணேசன், பொறியாளர் துறை செயலாளர் திரு டி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.